Apr 26, 2011

முதற்காதல்


வந்து போய் தசாப்தம் கடந்துவிட்ட போதும்
இன்றும் மனதில் ஈரமாய் இருக்கும்,
முதற்காதல்.
இன்று நினைக்கையில் சிரிப்பாக இருந்தாலும்
அன்று எதுவும் அது போல் வலித்திருக்காது,
முதற்காதல்.
களங்கமில்லா பேச்சுகளிலும், யதார்த்த தொடுகைகளிலும்
மட்டுமே நகர்ந்திருக்கும்
முதற்காதல்.
நீ இழந்தவற்றிலும், தொலைத்தவற்றிலும் இன்னும்
முதலில் வைத்திருப்பாய்- அது
முதற்காதல்
எத்தனையோ திரைப்படம் கடந்திருந்தும், அதை விடவும்
ஒரு காதல் கதை உன்னிடம் இருக்கும்- 
முதற்காதல்
நீ பார்த்திருக்கும் போதே உன்னை விட்டு அணுவாய் விலகி இறுதியில் மறைந்தே போயிருக்கும்
முதற்காதல்.
நட்பா ,காதலா என தடுமாற வைத்து காதல் தான் என்று  காணும் முன் கனவாய் கலைந்திருக்கும்
முதற்காதல்.
இன்று சந்திக்கும் எத்தனையோ உறவுகளில் எதன் சாயலையோ தேடிக்களைத்திருப்பாய் -அது
முதற்காதல்
வாழ்வின் சுயரூபம் புரியும் முன், கருப்பு பக்கங்கள் வரும் 
முன் வந்து போன ஒரு வசந்த காலம் 
முதற்காதல்
இந்த கவிதை அவளுக்காக தான் என்றாலும் அவள் படிக்க தர முடியவில்லை-ஆக அதுதான்
முதற்காதல்.
கவிதை சொல்லி, பத்து பந்திகள் கடந்து விட்ட போதும்
எதுவுமே சொல்லி விடாத உணர்வு எனக்குள் ஏன்..?
முதற்காதல்......?

Apr 25, 2011

மின்மினிகளும்
நட்சத்திரங்கள் தான்
இரவில்...