Aug 21, 2011

வாழ்க்கை

எண்ணங்களின் வண்ணங்களோடு
உடையும் வரை அலையுமொரு
நீர்க்குமிழி

Aug 18, 2011

BRRRRRRRR


             


கோக் உலகமே Cooool  உலகமாய்
இப்போ மாறுதே....
ஐஸ் கோக் சுவை உள் நுழைந்தெமை
BRRRRRR ஆக்குதே...     

கொகா  கோலா இருந்தாலே 
இன்பம்ம்ம் பரவும் தன்னாலே..
குளிர் பரவசம் எம்மிடமே 
BRRRRRR  தான்...    BRRRRRR  தான்...
இனி வாழ்வே...

கோக் தொட்டதும் இதழ் பட்டதும்
இதயம் கரையுதே
எம் தேகங்கள் BRRRRRR ஆகித்தான்
குளிரில் உறையுதே ...
  
கொகா  கோலா இருந்தாலே 
இன்பம் பரவும் தன்னாலே..
குளிர் பரவசம் எம்மிடமே 
BRRRRRR  தான்...   BRRRRRR  தான்...
இனி வாழ்வே...
                                         
விளம்பரக் காணொளி -
http://www.youtube.com/user/PhoenixOgilvy?blend=2&ob=5#p/u/1/Di-0DPNsWcA

;                                     


Aug 17, 2011




வண்ணப்பூச்சி
வந்தமர்வதை போன்ற 
உன் வருகை 
நிகழத்தான் வேண்டும்,
இனியும் இந்தக்  கவிதைகளால் 
என்னைக் காப்பாற்ற
முடியுமென்று 
தோன்றவில்லை...




Jul 20, 2011


மொட்டு உயிர்க்கையில்
மரணிக்கிறது
பனித்துளி.. 

Apr 26, 2011

முதற்காதல்


வந்து போய் தசாப்தம் கடந்துவிட்ட போதும்
இன்றும் மனதில் ஈரமாய் இருக்கும்,
முதற்காதல்.
இன்று நினைக்கையில் சிரிப்பாக இருந்தாலும்
அன்று எதுவும் அது போல் வலித்திருக்காது,
முதற்காதல்.
களங்கமில்லா பேச்சுகளிலும், யதார்த்த தொடுகைகளிலும்
மட்டுமே நகர்ந்திருக்கும்
முதற்காதல்.
நீ இழந்தவற்றிலும், தொலைத்தவற்றிலும் இன்னும்
முதலில் வைத்திருப்பாய்- அது
முதற்காதல்
எத்தனையோ திரைப்படம் கடந்திருந்தும், அதை விடவும்
ஒரு காதல் கதை உன்னிடம் இருக்கும்- 
முதற்காதல்
நீ பார்த்திருக்கும் போதே உன்னை விட்டு அணுவாய் விலகி இறுதியில் மறைந்தே போயிருக்கும்
முதற்காதல்.
நட்பா ,காதலா என தடுமாற வைத்து காதல் தான் என்று  காணும் முன் கனவாய் கலைந்திருக்கும்
முதற்காதல்.
இன்று சந்திக்கும் எத்தனையோ உறவுகளில் எதன் சாயலையோ தேடிக்களைத்திருப்பாய் -அது
முதற்காதல்
வாழ்வின் சுயரூபம் புரியும் முன், கருப்பு பக்கங்கள் வரும் 
முன் வந்து போன ஒரு வசந்த காலம் 
முதற்காதல்
இந்த கவிதை அவளுக்காக தான் என்றாலும் அவள் படிக்க தர முடியவில்லை-ஆக அதுதான்
முதற்காதல்.
கவிதை சொல்லி, பத்து பந்திகள் கடந்து விட்ட போதும்
எதுவுமே சொல்லி விடாத உணர்வு எனக்குள் ஏன்..?
முதற்காதல்......?

Apr 25, 2011

மின்மினிகளும்
நட்சத்திரங்கள் தான்
இரவில்...